அந்தி சாய்ந்தது; சூரியக் கதிர்கள் சுருங்கத் தொடங்கின! தென்றல் காற்று மெல்ல வந்து சன்னல் கம்பிகளில் எட்டிப்பார்த்தன! பறவைகள் தன் கூட்டைத் தேடி பறக்கத் தொடங்கின! மனிதர்களின் பரபரப்பு மிகுந்த வாகனங்களின் சப்தமும் சற்றே அடங்கத் தொடங்கின! தொழிற்சாலையில் வரும் ஒலிகள் போய் ஒவ்வொரு வீட்டிலும் ஒளிவீசத் தொடங்கின! பள்ளி மணியோசை அடங்கி, கோவில் மணியோசை கேட்கத் தொடங்கின! சிறுவர்கள் ஆசிரியர்களிடமிருந்து விடுபட்டு அன்னையின் அரவணைப்பில் துயிலத் தொடங்கினர்! ஆனால், அவள் மட்டும் தன் மெல்லிய கன்னத்தில் தென்றலைப் படரவிட்டு, கூந்தலை வருடிக் கொண்டே , அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள் தன் உள்ளத்தின் வெற்றிடத்தைப் போக்க…
-அ க சுகன்யா