மீளமுடியாமல்…

நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!
இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!

                                                    – சுகன்யா அ.க.

Advertisement

ரசனை!

Sunset
Sunset Pic Credit: Akshaya (penningwithpep.wordpress.com)

Author : Suganya Kannan
அன்று மாலைப் பொழுது!
சூரியன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல சுருக்கத் தொடங்கினான்.
செவ்வானம் எங்கும் படர்ந்திருக்க நானோ மாடியில் நின்றுக் கொண்டிருந்தேன்.
சில்லென்ற ஒரு தென்றல் காற்று மெல்ல படர்ந்தது அவள் கன்னத்தில்!
தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு!
சட்டென ஒரு ஓசை என் செவிகளில்!
அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி சாய்த்தவளாய் “இதோ வரேன் மா!” என்றாள்.
போன வேகத்தில் திரும்ப வந்து,
போன என் இதய துடிப்பை ஒரு கணம் மீட்டெடுத்தாள்!
அவளது கைகளில் ஒரு தேநீர் கோப்பை!
தேநீரைப் பருகும் பொழுது அவளது இதழ்கள் ஈரமானதை கண்டும் காணாதவன் போல் நான்!
சட்டென திரும்பி என்னை நோக்கினாள்.
மொட்டை மாடியில் இயற்கையை ரசிக்க வந்தவன் போல் நான் நடிக்க,
என்னை முறைப்பது போல் அவளும் நடித்தாள்.
ஆனால் நான் ரசித்தது என் எதிர் வீட்டு விமலாவையோ, கமலாவையோ அல்ல.
என் வீட்டு எஜமானி என் ப்ரியாவை தான்.
ஆம்! என் மனைவியை அவளுக்கே தெரியாமல் இரண்டு வருடம் ரசித்து தான் இன்று திருமணமும் செய்து கொண்டேன்.
ஆனால், அவள் அருகில் அந்த காதல்
மட்டும் மாறாதவனாய் என்றும் நான்!
Hope you all like the poem. Hit the star & Feel free to comment below if you like it.
For poem & story updates, do follow
mightypenarticles in Instagram.
Facebook Page : Mighty Pen -Articles- (https://m.facebook.com/OruKathaSollataaSir/)
Thanks to Akshaya for the Picture! For more pictures, do follow akshaya_photography in Instagram.

தனி மனிதனின் ஓலம்!

Author : Suganya Kannan

கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே!
பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு “என் அம்மாளு” என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான்!
ஒரு வயதில் நடைவண்டி,
மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம்,
என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான்.
வருடங்கள் ஓட,
ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் “நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க!” என்று கணவனிடம் கூறுகையில்,
கண்களில் ஆனந்தத்தையும் நெஞ்சில் பயத்தையும் சுமந்தவனாய் தன் மகளின் நெற்றியில் முத்தமிடுகிறான்.
ஆசையாய்ப் பெற்ற மகளை நன்கு படிக்கவேண்டும்,பெரிய பதவியில் யாருக்கும் அடிமை இல்லாமல் வாழவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவன்,
நாளிதழில் தினம் ஒரு செய்தியாய் வந்துச் செல்லும் பெண்களுக்கு      நடக்கும் கொடூரத்தைப் பார்த்ததும்,
அம்மா நீ படித்தது போதும், உனக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளேன், திருமணம் செய்துகொள்” என்று கூறுகிறான் சற்றே தயக்கத்துடன்!
சிறுவயதில் இருந்து பற்பல ஆசை, லட்சியம் என்று அப்பா உரைத்த சொல்லுக்கு அப்படியே கட்டுப்பட்ட மகளோ இன்று பகுத்தறிந்தவளாய் ஏன் என வினவுகிறாள்?
அதற்குத் தகப்பனிடம் பதில் ஒன்றும் பெரிதாய் இல்லை.

இறுதியில் ஒரு மகவைப் பெற்று அவளை அலங்கரித்து படிக்கவைத்து, அதிகாரம் செய்யும் தோரணையைப் பார்க்க எண்ணிய தகப்பனோ,

சமையல் அறையில் கணவனுக்கு சமைத்து விட்டு, “அவருக்கு இன்னைக்கு சமையல் பிடிக்குமோ பிடிக்காதோ?” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்த தன் தவப்புதல்வியைக் கண்டு தொண்டையில் முள் சிக்கியவனாய், எச்சிலை விழுங்கியபடி மகளின் வீட்டை விட்டு நகர்ந்தான்.

பெண் விடுதலை, பெண் உரிமை, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் எத்தனை முறை கூச்சலிட்டாலும்

தமிழா! உன் சமுதாயம் மரபு என்ற பெயரில் செய்யும் அநீதி அழிவில்லாமல் தொடர்கிறது சில கயவர்கள் செய்யும் வன்கொடுமைகளால்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

– இப்படிக்கு ஒன்றும் செய்யமுடியாதவளாய்  சுகன்யா.அ.க.