Author : AK Suganya Dinesh
சுதந்திரம்!
இந்த பாரதத்தில் நாம் வாழும் வாழ்க்கைக்கு மட்டுமல்ல!
சொல்லும் சொல்லுக்கும்,
செய்யும் செயலுக்கும்;
அநீதிக்கு எதிரான கருத்திற்கும்,
படிப்பிற்கும் பண்பிற்கும்
உரியது.
ஆனால், இச்சுதந்திரம் அவற்றிக்குச் சரியாகப் பயன்படுகிறதா என்றால் சற்றே தயக்கம் தான்!
அன்று நம் முன்னோர்கள் பெற்று தந்த
படிப்புரிமை இன்று,
சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து
பெண்களை சூறையாடுவதற்கும்,
கருத்து சுதந்திரம் என்ற பெயரில், செய்யும் பிழைகளையெல்லாம் செய்துவிட்டு சமூகத்தின் மேல் பழி போடவும்,
பண்பு என்ற பெயரில், பலர் நம் நாட்டின் பண்பையே மறந்து, பெற்ற தாயை வீதியிலும், வீதியில் உள்ள ஜீவராசிகளை வீட்டிற்குள்ளும் வாழ வழி செய்வதற்கும்,
தனிமனித சந்தோஷம் என்ற பெயரில் சிலர், கட்டிய மனைவிக்கும், பெற்ற பிள்ளைக்கும், வித்தியாசம் பாராமல் இருப்பதற்கும் பயன்பட்டு விட்டதோ என்று அச்சம் எழுகிறது.
இந்த கோரச் சம்பவங்கள் அனைத்தும் செய்தியாய் என் செவிகளில் விழுகையில் என் தாய் திருநாடு வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரம் இன்று சுயநலவாதிகளிடம் முடங்கிவிட்டதோ? என்ற மிகப்பெரிய கேள்வி பதில் தெரியாமல் தவிக்கிறது குழப்பத்தில்!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
-சுகன்யா அ க