Author : AK Suganya Dinesh
மழைக் காலத்தில் குஞ்சுகளின் பசி தீர்க்க காக்கை, உணவை தேடி அலைவதும்;
முட்டைகளை எவரேனும் தீண்ட விடாது கோழி, இருபத்தொருநாள் அடைகாப்பதும்;
ஈன்ற கன்று பால் குடித்த பிறகே பசு, மானுடனின் கை மடி தீண்ட அனுமதிப்பதும்;
பெண்! தன் பசி பற்றி ஒரு நாளும் எண்ணாது, குழந்தைக்குப் பசிப்பதற்கு முன்பே சமைத்து, பின் உண்பதும்;
தாய்மை என்றால்,
வயது முதிர்ந்த பிச்சைக்காரன் தன் தட்டில் விழுந்த ரொட்டித் துண்டில் பாதியை நாய்க்குத் தானம் செய்வதும் தாய்மை அன்றோ!
பெற்ற தாயை மட்டுமல்லாது பிற உள்ளங்களின் தாய்மை உணர்வையும் போற்றுவோம்! மகத்தான வாழ்வு வாழ்வோம்!
– இப்படிக்கு
சுகன்யா தினேஷ்