Author: Preethika Balasubramani
எனக்கா சுதந்திரம் ?
அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே
எனக்கா சுதந்திரம்?
வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே
எனக்கா சுதந்திரம் ?பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே!
எனக்கா சுதந்திரம் ?
புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே
எனக்கா சுதந்திரம் ?
போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே பொசுங்கியிருப்பேன் !!தப்பித்து வெளிவந்தேன் என்று மார்தட்டினேன் தட்டிய மறுநொடி மாரை காணவில்லை. !!
என் உடலோடு சேர்த்து உயிரையும் சிதைத்துவிட்டான் !
நான் அண்ணா என்று அழைத்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாத மூடன் ஒருவன்!
– (Justice For _____ )
பெண்கள் வாங்கி வந்த வரம் !!
நாம் பெண்களாகப் பிறந்து வாழ்ந்து இறப்பதே
சாதனை தான் !!!
LikeLiked by 1 person
கனவுகளோடு வாழும் பல பெண்கள் சிதைக்கப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கும் … தனி மனிதன் திருந்தும் வரை … உன் எழுத்துக்களால் வலிக்க வை தோழி ….. வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person
நன்றி நண்பா !!
LikeLike